Thursday, April 16, 2009

துவங்கியது அழகிரியின் அட்டுழியங்கள்...

எதிர்பார்த்ததுபோலவே மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டங்களில் இறங்கிவிட்டனர். சொந்தக் கட்சி அலுவலகங்களுக்கே தீ வைத்தனர். அவர்களின் அராஜகத்திற்கு அப்பழுக்கற்ற சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் இலக்காகியுள்ளார்.


புதனன்று இரவு சுமார் பதினொரு மணியளவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நன்மாறன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனமொன்றில் வந்த இருவர் அவரை வழிமறித்து கொலைவெறித் தாக்குதல்நடத்தினர். கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.


மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் மக்கள் நண்பன் நன்மாறன். மக்கள் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாது என்பது உறுதியாகிவிட்டதால் பண மற்றும் ஆட்பலத்தை நம்பி களத்தில் இறங்கியுள்ளனர். மதுரை மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்களின் பொத்தான்கள் கூட மே 16 ஆம் தேதியை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment